Wednesday, 9 October 2013

ருசிக்கேற்ப ( அல்லது ) தேவைக்கேற்ப

இது என்ன பழைய தமிழ் நாவல்  தலைப்பு போல இருக்கிறதே  என்று

குழப்பமாக உள்ளதா? இது  வேறு விஷயம்.

அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமில்லவிடிலும் உப்பு பெறாத சமாசாரம்

 இல்லை .உப்பு பெறும் சமாசாரம்தான்.

 இனியும் பொறுக்கமாட்டீரகள் .சொல்லிவிடுகிறேன் .

சமையல் குறிப்பு என்று பலரும் தொலைக்காட்சியில் காண்பிக்கையில்

அது  என்ன உப்பு அளவை மட்டும் நம்முடைய கற்பனைக்கு

 விட்டுவிடுகிறார்கள்? இதற்கு கூறப்படும் காரணம் , வீட்டுக்கு வீடு ருசி

மாறும் என்பது

. இந்த சமையல் வல்லுனர்கள்  புதிதாகக்  கற்பவர்களுக்கு மற்ற

எல்லாவற்றிலும் குறிப்புகள் தருகிறார்கள் ,உபபைத்தவிர .

அது மிகவும் முக்கியமில்லையா?.

சரி, என்னதான் சொல்லவருகிறாய்  என்கிறீர்களா ?

சமையல் வல்லுனர்கள் ஒரு குறைந்த அளவும் ஒரு அதிகபட்ச அளவும்

 கூ றலாமே  ஒரு  டீ ஸ்பூன் முதல் ஒன்றேகால் டீ ஸ்பூன் வரை என்பது

 போல

நான் பெரிய வித்தகி இல்லை ; எனினும் எனது முப்பது வருட சமையல்

அனுபவத்தில் கண்டுகொண்டது இது -இதனை சமையல் கற்பவர்களிடம் 

கூற விரும்புகிறேன். நான்கு பேருக்கு சமைக்கும் சாம்பார், கூட்டு,காரம்

அதிகமுள்ள வதக்கல் போன்றவற்றிற்கு ஒன்றரை டீஸ்பூன் பொடி உப்பு

சேர்க்கலாம் .காரம் குறைவாக தேங்காய்  சேர்த்த காய் வகைகளுக்கு ஒரு

டீஸ்பூன் போதுமானது .சமைக்காத சாலட் ,பச்சடி இவற்றுக்கு இன்னும்

குறைவான உப்பு போதும். கல் உப்பாக இருந்தால் சிறிது அதிகம் சேர்க்கலாம்


வால்  பகுதி !! (டெயில் பீஸ்க்கு தமிழில் என்ன?)

நான் முதனமுதலில் 12 வயதில் 4 பேருக்கு சமையல் செய்தேன்.

எப்போதும் 10 நபர்கள் இருந்த வீடு. அதனால் என் பாட்டி இடும் உப்பு அளவைக்

கவனி த்தி ருந்த  நான் அதே அளவு உப்பை  4 பேருக்குப்  போட்டேன் 

பிறகு என்ன ? அம்மா கோபிக்க  தாத்தா கொஞ்ச .. எல்லாம்  சுபம்


3 comments:

  1. Excellent.. "Amma kobikka, thatha konja".. adellam seri, Paatti enna panna ?!

    ReplyDelete
  2. Super! loved the "vaal paguthi"...

    ReplyDelete
  3. awesome post...romba nalachu tamil paditu....

    ReplyDelete